லாரி மோதி பெண் பரிதாப சாவு

1073பார்த்தது
லாரி மோதி பெண் பரிதாப சாவு
தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.  


தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி சுப்புலட்சுமி (50), இவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் தொழிற் பேட்டையில் உள்ள  ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இன்று மாலை 6 மணி அளவில் வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலை ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.


அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்புலட்சுமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி