திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் முகாமில் மேயர் சரவணன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக சுமார் ஒன்றரை மாதங்களாக மாநகராட்சியில் முகாம் நடைபெறாமல் இருந்தது அதன் பிறகு இன்று மீண்டும் முகாம் தொடங்கியது குறிப்பிடப்பட்டது.