உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி, தேசிய பசுமை படை, நாட்டு நலப்பணி திட்டம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாட்டம் இன்று (ஜூன் 10) நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.