நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை பகுதி ஒன்றிய அரசியல் பயிலரங்கம் பர்கிட்மாநகரில் நேற்று (ஜூன் 9) நடைபெற்றது. இந்த பயிலரங்கத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா, மண்டல செயலாளர் கனி ஆகியோர் கலந்துகொண்டு சமகால அரசியல் குறித்து கட்சியினருக்கு வகுப்புகள் எடுத்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.