திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் டவுன் கோடீஸ்வரன் நகரில் இன்று (ஜூன் 8) காலை தூய்மை பணியாளர்களுக்கு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர நகர் அலுவலர் டாக்டர் சரோஜா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.