திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவமனையின் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் மருத்துவரின் கார் கண்ணாடி இன்று (மே 16) உடைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.