நெல்லை மாவட்டம் முக்கூடலில் நியாய விலை கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் பெய்த கனமழையால் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிக்கு ரூபாய் 6000 வெள்ள நிவாரண நிதியாக நியாயவிலை கடைகள் மூலமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் டோக்கன் வழங்கப்பட்டும் இதுவரை வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை எனக் கூறி நியாய விலை கடையை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.