ஆண்டிப்பட்டி - Andipatti

ஆண்டிபட்டி தனியாா் தோட்டத்து நீரில் மூழ்கி சிறுவன் பலி

ஆண்டிபட்டி தனியாா் தோட்டத்து நீரில் மூழ்கி சிறுவன் பலி

சித்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (32). இவரது மகன் வேணுபிரசாத் (3). இந்த நிலையில், பால்பாண்டியின் தந்தை, வேணுபிரசாத்தை அழைத்துக் கொண்டு அதே ஊரில் உள்ள தனியார் தோட்டத்துக்குச் சென்றார்.  அங்கு அவர் ஆடுகளுக்கு தீவனம் பறித்துக் கொண்டிருந்த போது, தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேணுபிரசாத் அங்குள்ள குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதைத்தொடர்ந்து, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


தேனி
பெரியகுளம்: மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்
Apr 05, 2025, 06:04 IST/பெரியகுளம்
பெரியகுளம்

பெரியகுளம்: மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்

Apr 05, 2025, 06:04 IST
தேனி மின் பகிர்மான வட்டம் பெரியகுளம் கோட்டம் குறைதீர்க்கும் முகாம் பெரியகுளம் நகர் பிரிவு அலுவலகத்தில் கோட்ட செயற்பொறியாளர் பால பூமி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மின் நுகர்வோர், மின் கட்டண குறைகள் மின் மீட்டர் குறைபாடு, குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட புகார்களை மனுக்களாக வழங்கினர்.  இந்த புகார் மனுக்களை பெற்றுக் கொண்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர். பெரியகுளம் (மேற்கு) உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம், பெரியகுளம் (கிழக்கு) உதவி செயற்பொறியாளர் பார்த்தசாரதி, ஆண்டிப்பட்டி (மேற்கு) உதவி செயற்பொறியாளர் முருகன், மற்றும் உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மின்வாரிய அதிகாரிகள் செய்திருந்தனர்.