
ஆண்டிபட்டி தனியாா் தோட்டத்து நீரில் மூழ்கி சிறுவன் பலி
சித்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (32). இவரது மகன் வேணுபிரசாத் (3). இந்த நிலையில், பால்பாண்டியின் தந்தை, வேணுபிரசாத்தை அழைத்துக் கொண்டு அதே ஊரில் உள்ள தனியார் தோட்டத்துக்குச் சென்றார். அங்கு அவர் ஆடுகளுக்கு தீவனம் பறித்துக் கொண்டிருந்த போது, தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேணுபிரசாத் அங்குள்ள குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதைத்தொடர்ந்து, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.