திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேவூரில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்குள் நேற்று முன் தினம் (ஜூன் 6) ஒரு பாம்பு திடீரென புகுந்தது, இதை பார்த்து குடும்பத்தார் அதிர்ச்சியடைந்த நிலையில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பாம்பை லாவகமாக பிடித்து அருகிலுள்ள வனப் பகுதியில் விடுவித்தனா்.