புதுவருடம் பிறந்துள்ள நிலையில் சாமானியர்களுக்கு அதிர்ச்சியை தரும் வகையில் அரிசி விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. HMT, BPT, சோனா மசூரி அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குவிண்டாலுக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை விலை அதிகரித்துள்ளது. 25 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசி வகையைப் பொறுத்து ரூ.250ல் இருந்து ரூ.375 ஆக விலை அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்தது மற்றும் நெல் சாகுபடி குறைந்ததே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.