சீனா: பயத்தை எதிர்கொள்ளவும், தன்னம்பிக்கையை பெருக்குவதற்கான பயிற்சியாகவும், நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களை நெருப்பை விழுங்கவைத்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பஞ்சில் நெருப்பை பற்ற வைத்து அதை விழுங்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரான ரோன்ராங், சமூகவலைதளத்தில் இது குறித்து ஆதங்கமாக பதிவிட்டுள்ளார். இதை செய்யாவிட்டால் வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் பலரும் இதை செய்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.