தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே
புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேக விழா ஏப். 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு கும்ப பூஜை, ருத்ர பாராயணம், மூல மந்திர ஹோமங்கள், அபிஷேகம் நடைபெறும், காலை 10. 20 மணிக்கு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி, பரிவார மூா்த்திகள் மற்றும் விமான கலசங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெறும்.