கடையம் ஒன்றியம், நெல்லையப்பபுரத்தில் அய்யப்ப சுவாமி பக்தர்கள் சார்பில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட
திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன் தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் சங்கர், கே. எஸ். மணி, கண்ணன், கிளை செயலாளர் செல்வன், குருசாமி அரசையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.