தென்காசி 13 ஆவது வாா்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி வட்டாரக் கல்வி அலுவலா் சண்முக சுந்தரபாண்டியன் தலைமை வகித்து, மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகளை வழங்கினாா். ஆங்கில பட்டதாரி ஆசிரியா் வின்சென்ட் முன்னிலை வகித்தாா்.
ஆசிரியை கௌசல்யா வரவேற்றாா். எப்சிபா நன்றி கூறினாா்.