தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளன. சிவகுருநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விரதம் மேற்கொண்டு மினி லாரியில் மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்துடன் பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.
பக்தி பாடல்கள் ஒளிபரப்பு செய்தபடி முருக சரண கோஷம் முழங்கிய படியும் அவர்கள் பாதயாத்திரை சென்றனர்.