இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் ஆறுகாட்டுத் துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்களை சந்தித்த ம.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், இப்பிரச்சனையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும், இலங்கை தூதரகம் மற்றும் இந்தியாவுடைய வெளியுறவுத் துறை ஆகியவற்றுக்கும் இவற்றை கவனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அவர்களிடம் தமிமுன் அன்சாரி உறுதியளித்துள்ளார்.