மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை

56பார்த்தது
மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை
சென்னை வேளச்சேரி அடுத்த தரமணி மற்றும் கானகம் கட்டபொம்மன் தெரு பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தரமணி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவரிடம் 900 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் கானகம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த குகன்(19) என்பதும் வேளச்சேரியில் உள்ள கல்லூரியில் பிபிஏ படித்து வருவதாகவும், ஹைதராபாத் சென்று போதை மாத்திரையை வாங்கிவந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி