எஸ்பிஐ வங்கிக்கு மறைக்கக் கூடிய அனைத்து தகவல்களையும் உடனே வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்வினையாக கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள் நிதியில் இயங்கும் ஒரு பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பாஜக நரேந்திர மோடியின் தேர்தல் பத்திர ஊழலை மறைக்க முயல்வது வெட்கக்கேடானது. சட்டப்படி கடுமையான குற்றம். இதை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.