சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில், தனியார் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மார்ச். 15) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நுட்பவழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
இதில் 8-ஆம் வகுப்பு முதல் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்பயிற்சி போன்ற கல்வித்தகுதியுடையவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது சுயவிவரம் (தங்களின் விவரங்கள்), கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.