கால்நடை சந்தையில் 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

52பார்த்தது
சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் மெயின் ரோடு பகுதிகளில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை கால்நடை சந்தை நடைபெறும், காலை ஐந்துமணி முதல்10மணிவரைஆடு, கோழி, வாத்து, வான் கோழிஉள்ளிட்டவைகள் அதிகளவில்விற்பனைசெய்யப்படும், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள், சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் தாலுகாவில்தான் கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்படுகிறது. மணல்மேடு, பெத்தானேந்தல் அல்லிநகரம், பழையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகள் வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் தங்களது ஆடுகளை வாரச்சந்தையில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம், தீபாவளி, ஆடி, சிவராத்திரி, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட விசேச நாட்களில் சந்தை களை கட்டும் என்பதால் பலரும் ஆடுகள் வாங்க சந்தையில் குவிந்திருந்தனர். இன்று அதிகாலை முதல் ஆடுகள் வரத்து அதிகளவு இருந்தது. காலை 8 மணி வரை 3ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன எடைக்கு ஏற்ப ஒரு ஆடு 15 முதல் 45 ஆயிரம் வரை ஆடு விற்பனையாகின. திருமணம், காதணி விழாக்களில் அசைவ விருந்திற்கு ஆட்டுகிடா வைத்து பயன்படுத்துவார்கள் என்பதால் விலை அதிகரித்துள்ளது. ஆடுகள் விலை அதிகரித்ததால் ஒரு கோடிக்கு மேல் விற்பனை ஆகி உள்ளதாக கூறுகின்றனர்

தொடர்புடைய செய்தி