கிணற்றுக்குள் விழுந்த ஆடு -உயிருடன் மீட்பு

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள சோதுகுடி கிராமத்தை சேர்ந்த சாந்தி சொந்தமாக சுமார் 10க்கும் மேற்பட்ட வெள்ளை ஆடுகள் வளர்த்து வருகிறார். ஆடுகளில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை தேடி வந்த போது வயல்வெளியில் இருந்த ஒரு சுமார் 50 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் உள்ளே கிடந்துள்ளது. இதை பார்த்த ஆட்டின் உரிமையாளர் இளையான்குடி தீயணைப்பு‌ காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் கயிறை போட்டு உள்ளே இறங்கி அந்த ஆட்டை மீட்டு கரையில் விட்டனர் ஆடு தான் என்று அலட்சியமால் விடாமல் தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கி ஆட்டை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

தொடர்புடைய செய்தி