தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைத்துள்ளதாகவும், விரைவில் கணக்கெடுக்க நடத்தப்படும் என ஒரு தகவல் சமூக ஊடகங்களின் பரவி வருகிறது. அப்போது சாதியுடன் இந்து மதம் என்றும் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் வேறு மதத்தை அவர்களே எழுதிக் கொள்வார்கள் என்றும் பரப்பப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு கூறியுள்ளது.