வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு அதிர்ச்சி அளித்துள்ளது. சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு ரூ.1 உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தேசிய தலைநகர் மண்டலம் (என்.சி.ஆர்), டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த வாகனங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளதால் அங்குள்ள வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுவர்.