தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

4530பார்த்தது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகம் மற்றும்
மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய 7 மாவட்டங்களின் சில இடங்களில் திங்கள்கிழமை(ஜூலை 20) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:இலங்கை கடலோரப்பகுதி அருகே தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, வட தமிழகம், மேற்கு தொடர்ச்சிமலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 20) இடியுடன் கூடிய லேசானது முதல்மிதமானது வரை மழைபெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 20) பலத்த மழைபெய்யக்கூடும். சென்னையை
பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மிதமான மழைபெய்யக்கூடும் என்றார்.