தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

82பார்த்தது
தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 50). தொழிலாளி. இவர் மணக்காடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை ஜான்சன்பேட்டையை சேர்ந்த கோபி (26) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி