கழிவு நீரை வெளியேற்றிய 40 சாயப்பட்டறைக்கு சீல்!

80பார்த்தது
கழிவு நீரை வெளியேற்றிய 40 சாயப்பட்டறைக்கு சீல்!
சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டில் கழிவு நீரை வெளியேற்றிய 40 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறையை மீறி செயல்பட்ட 114 பட்டறைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாத சாயப்பட்டறைக்கு கட்டிடம் வாடகைக்கு வழங்கினால் அதன் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :