சேலத்தில் ஆட்டோ மோதி முதியவர் சாவு

539பார்த்தது
சேலத்தில் ஆட்டோ மோதி முதியவர் சாவு
சேலம் குகை புதுத்தெருவை சேர்ந்தவர் ஜவருல்லா (வயது80). இவர் கன்னங்குறிச்சி சுடுகாடு அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி