மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 21-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படும்

4036பார்த்தது
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 21-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படும்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப். எல். 1, எப். எல். 2, எப். எல். 3, எப். எல். 3 ஏ மற்றும் எப். எல். 3ஏ ஏ உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் அனைத்தும் 21-ந்தேதி மூட வேண்டும். மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி