சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

1538பார்த்தது
சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
சேலம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்தவர் பசுபதி (வயது 82) விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றார். அங்கு அவர் கிணற்றின் அருகே இருந்த புற்களை அறுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பசுபதி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவா்கள் கிணற்றில் இருந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி