சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

57பார்த்தது
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, ஐயப்பன் கோயிலில் நாளை (ஆகஸ்ட் 17) முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. அனைத்து நாட்களிலும் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜையும், இரவு 7.00 -மணியளவில் படி பூஜையும் நடைபெறும். பின்னர் ஆகஸ்ட் 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி