மத்திய அரசை கண்டித்து வி. சி. க. , ஆர்ப்பாட்டம்.!

74பார்த்தது
மத்திய அரசை கண்டித்து வி. சி. க. , ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட அற்புதக்குமார் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவித்து நிவாரண நிதியை மத்திய பா. ஜ. , அரசு உடன் வழங்க வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை தடை செய்து ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். மாநில அமைப்பு செயலாளர் அப்துல்நாசர், துணை செயலாளர் கலைவேந்தன், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி