பைக்கிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

4010பார்த்தது
கந்தர்வகோட்டை அருகே முதுகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (47). கூலி தொழிலாளி. இவர் தனது ஊரிலிருந்து பைக்கில் கந்தர்வகோட்டைக்கு வந்து கொண்டிருந்துள்ளார். அச்சுதாபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதையடுத்து உறவினர்களால் தஞ்சை மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்ட செல்வராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி