காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழா நடைபெற்றது. இதில் ரதங்கள், பல்லாக்கு உள்ளிட்ட ஊர்திகள் கொடிகள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தர்கா வந்ததடைந்தது. இதனை தொடர்ந்து கொடிமரம் உள்ளிட்ட மினாராக்களில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வரும் 29 ஆம் தேதி இரவு நடைபெறுகின்றது.