காரைக்காலில் வரும் ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் கார்னிவல் விழா முன்னிட்டு வேளாண்துறை மூலம் மலர்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் உள்ளிட்ட சேகரிப்பு போன்ற போட்டிகள் நடத்தி 'மலர் ராஜா', 'மலர் ராணி' பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ள பொதுமக்கள் ஜனவரி 2 முதல் 9ம் தேதி வரை தங்களது பெயரை பதிவு செய்து போட்டியில் பங்கேற்கும்படி காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.