இலவச டீசல் கேட்டு அமைச்சரிடம் மனு!

53பார்த்தது
இலவச டீசல் கேட்டு அமைச்சரிடம் மனு!
கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்லும் மீனவர்களுக்கு இலவசமாக 100 லிட்டர் டீசல் வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். பிப்.23, 24ல் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 70 விசைப்படகு, நாட்டுப்படகில் பக்தர்கள் செல்ல உள்ளனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் மனு அளித்தனர். நாட்டுப்படகு மீனவர்களின் பொருளாதார சூழ்நிலையால் கச்சத்தீவு திருவிழாவுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நிலை உள்ளது என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி