நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அடுத்துள்ள மானத்தி பகுதியில், ஆமணக்கு சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விளக்கெண்ணெய் தயாரிக்க ஆமணக்கு விதைகள் மூலப் பொருளாக உள்ளது. ஆமணக்கு விதைகள் மூலம் கிடைக்கும் விளக்கெண்ணெய் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
எனவே ஆமணக்கு செடிகளை பயிரிட்டுள்ளதால் நல்ல லாபம் கிடைப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.