மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியின் நெற்றிப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பணிகளை மேற்கொண்ட அவர், நடந்து செல்லும்போது திடீரென தவறி விழுந்ததில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மம்தா நெற்றியில் ரத்தம் வழிவது போன்ற படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.