ஸ்பீக்கர்கள் பறிமுதல்: ஒருவர் கைது

4673பார்த்தது
ஸ்பீக்கர்கள் பறிமுதல்: ஒருவர் கைது
மதுரை மாவட்டம் பெரிய பூலாம்பட்டி அருகே சின்ன ரெட்டிபட்டி சீலக்காரி அம்மன் கோயிலில் உரிய அனுமதி இன்றி அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் பாட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற எஸ்ஐ ஜெயபாண்டியன், எஸ் கோட்டப்பட்டி சேர்ந்த சின்னச்சாமி (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 ஸ்பீக்கர்களை பறிமுதல் செய்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி