திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி வாகன ஓட்டுநர்கள் மற்றும் வணிகர்களை உள்ளடக்கிய சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.