திருமங்கலம் மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பேரூராட்சி சார்பாக மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது.
பொதுமக்களிடம் இடமிருந்து 13 துறைகள் சம்பந்தப்பட்ட 584 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு அதிக மனுக்கள் வந்தன அந்த மனுக்கள் மீதான தீர்வு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
முகாமில் பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி டி. கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவர் முத்து கணேசன் செயல் அலுவலர் கண்ணன் துணைத் தலைவர் பாண்டி முருகன் துணைத் தாசில்தார் மயிலேறி நாதன் பேரூராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் பல 13 துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.