அமைச்சர் வீடு அருகே 2 மணி நேரம் மின்வெட்டு வெயில் காலத்தில் இது போன்ற மின்வெட்டால் பொதுமக்கள் அவதி.
மதுரை கிழக்கு தொகுதியில் புதூரை அடுத்துள்ள சூர்யா நகர் பகுதியில் நேற்று காலையில் ரெண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது.
எந்த காரணம் இன்றியும் முன் அறிவிப்பு இல்லாமல் தொடரும் மின்வெட்டால் மக்கள் அவதி அடைந்தனர் இந்த பகுதியில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி தொகுதி என்பது கூடுதல் சிறப்பு மேலும் அமைச்சரின் வீடும் அதே பகுதியில் உள்ளது என்பது தெரிந்தே அறிவிப்பு இல்லாத மின்வெட்டு காரணத்தால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.