மதுரையில் இந்திய தர நிர்ணய அமைப்பு (பி. ஐ. எஸ்) சார்பில் தர நிலை மேம்பாட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக நொதித்த பாலை அடிப்படையாகக் கொண்ட பானங்கள் என்பது பற்றிய கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
இதில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிகாரிகள் பல்வேறு ஆய்வகங்களின் பிரதிநிதிகள் மதுரை மங்கையர்க்கரசி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.