"உண்மையான குற்றவாளி யார் என இபிஎஸ் கூறட்டும்" - அமைச்சர் ரகுபதி

55பார்த்தது
"உண்மையான குற்றவாளி யார் என இபிஎஸ் கூறட்டும்" - அமைச்சர் ரகுபதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்று இபிஎஸ் கூறட்டும். சதி செயலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் புலனாய்வின் அடிப்படையில் கைது செய்துள்ளோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you