கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கருப்பேரி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை கோவில் முகஸ்தர்கள் வந்தனர். அப்போது கோயில் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் கோவில் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி மற்றும் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை மத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.