போக்குவரத்து ஊழியர்கள்- துண்டு பிரசுரம் விநியோகம்.

567பார்த்தது
போக்குவரத்து ஊழியர்கள்- துண்டு பிரசுரம் விநியோகம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை 4-ங்கு முனை சந்திப்பில் ஊத்தங்கரை போக்குவரத்து ஊழியா்கள், வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கோரி பொது மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். இதில் போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கவும் தமிழக மக்களின் பயண உரிமையை நிலை நிறுத்தவும், ஓய்வு பெற்ற, பணியில் உள்ள ஊழியா்களின் நலன் காக்கவும் வேலை நிறுத்தத்தை தவிர வேறு வழியில்லை போராட்டத்தை நோக்கி தள்ளியது அரசுதான் என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு கோரி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி