பொது இடத்தில் ஆபாசமாக பேசிய நபர் மீது வழக்கு பதிவு.

83பார்த்தது
பொது இடத்தில் ஆபாசமாக பேசிய நபர் மீது வழக்கு பதிவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்துள்ள வீரணகுப்பம் பகுதியில் சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கும் அதே பகுதியை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீரணகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த செல்லமுத்துவை பொது இடத்தில் வைத்து அநாகரீகமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி