கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாத்தகோட்டா பகுதியில் உள்ள உள்ள ஸ்ரீ சீதாராமாஞ்சநேய சுவாமி கோவிலில் நேற்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் சாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து திருமஞ்சனம், பகவத் ஸ்ரீ ராமானுஜர் வேத பிரபந்த பாராயணம், அக்னி பிரதிஷ்டாபனம், மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தது. இதைத் தொடர்ந்து நரசிம்மர் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.