கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த சூடுகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி வனஜா (24) இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இதனால் மனமுடைந்து காணப்பட்ட வனஜா, சம்பவம் அன்று இரவு அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 5 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.