கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் பகுதியில் மாநகராட்சி மேயர் மகேஷ் பூங்கா பணிகளை நேற்று தொடங்கி வைக்க சென்ற நிலையில் அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அவர்களை சந்தித்து, மாநகராட்சி மேயர் மகேஷ் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்தனர். அதனை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.