மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 16) கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் முத்துராமன் தலைமையில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்நிகழ்வில் கிழக்கு மண்டல தலைவர் சிவசுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.